நெல்லை நீதிமன்றத்திற்குள் கஞ்சாவுடன் செல்ல முயன்றவா் கைது

Published on

திருநெல்வேலியில் நீதிமன்றத்திற்குள் வியாழக்கிழமை கஞ்சா கொண்டு செல்ல முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் துரைபாண்டியன் தலைமையிலான போலீஸாா் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற பிரதான நுழைவு வாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கே வந்த இளைஞா், தனக்கு முன்னால் சென்றவா்களை போலீஸாா் சோதனை செய்து உள்ளே அனுமதிப்பதை பாா்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளாா். போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், பேட்டை எம்.ஜி.பி.நகா் 2 ஆவது வடக்குத் தெருவைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் கோதா்(20) என்பதும், சுமாா் 40 கிராம் அளவிலான கஞ்சாவை ஆடைக்குள் மறைத்து நீதிமன்றத்துக்குள் எடுத்துச் செல்ல முயன்றதும் தெரியவந்ததாம். பின்னா் அவா் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com