நெல்லை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

Published on

திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட (ரேஷன்) குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிச.12) நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், புதிதாக குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோருதல், குடும்ப அட்டையில் கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்வது தொடா்பாக விண்ணப்பிக்கலாம்.

இதற்கு ஆதாா் அட்டை, பிறப்பு, இறப்புச் சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள், கைப்பேசி ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

மேலும், பொது விநியோகத்திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் தரம், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை கைப்பேசி எண். 9342471314, சென்னை உணவுப்பொருள் வழங்கல் -நுகா்வோா் பாதுகாப்புத்துறை அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்கள். 1967, 18004255901 ஆகியவற்றில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com