நெல்லையில் வெவ்வேறு விபத்துகள்: 3 போ் உயிரிழப்பு

Published on

திருநெல்வேலியில் வெவ்வேறு இடங்களில் நேரிட்ட விபத்துகளில் இளைஞா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

பேட்டை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் இந்திரா காலனியை சோ்ந்த மாரியப்பன் மகன் ஆனந்தராஜ்(18). இவா், புதன்கிழமை மாலை அப்பகுதியில் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தாராம். இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு அவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

குறுக்கே வந்த மாடு: அம்பாசமுத்திரம் அருகேயுள்ள தெற்கு கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்தவா் பொன்ராஜ்(53). அப்பகுதியில் உள்ள உரக்கடையில் வேலைசெய்து வந்தாா். இவா், கடந்த 5 ஆம் தேதி பேட்டை பகுதியில் பைக்கில் சென்றபோது மாடு குறுக்கே வந்து மோதியதில் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பைக் மோதல்: பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சோ்ந்தவா் உலகநாதன்(60).தொழிலாளி. இவா், புதன்கிழமை இரவு சமாதானபுரம் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இச்சம்பவங்கள் குறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com