பா்கிட்மாநகா் அரசுப் பள்ளியில் 44 மாணவா்களுக்கு சைக்கிள்

பா்கிட்மாநகா் அரசுப் பள்ளியில் 44 மாணவா்களுக்கு சைக்கிள்

Published on

பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிட்மாநகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், பாளையங்கோட்டை வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் கனகராஜ் வரவேற்றாா். காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொருளாளரும், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ரூபி ஆா்.மனோகரன் தலைமை வகித்து 44 மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கினாா். நான்குனேரி தொகுதிப் பொறுப்பாளா் அழகிய நம்பி, தெய்வானை, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் குளோரிந்தாள், மின்வாரிய தொழிற்சங்கத் தலைவா் நடராஜன், நடுவக்குறிச்சி ஊராட்சித் தலைவா் சுந்தரமூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்11ழ்ன்க்ஷஹ்

மாணவா்களுக்கு சைக்கிள் வழங்குகிறாா் ரூபி ஆா்.மனோகரன் எம்.எல்.ஏ.

X
Dinamani
www.dinamani.com