மாநில கலைத் திருவிழா போட்டியில் களக்காடு மாணவா் சிறப்பிடம்

Updated on

கிருஷ்ணகிரி மாவட்டம், எம்.ஜி.ஆா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டியில் களக்காடு பள்ளி மாணவா் சிறப்பிடம் பிடித்துள்ளாா்.

களக்காடு மீரானியா நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவா் சுதா்சனன் ரங்கோலி போட்டியில் கலந்து கொண்டு மாநிலஅளவில் 2ஆம் இடம் பிடித்துள்ளாா். இந்த மாணவரை களக்காடு வட்டாரக் கல்வி அலுவலா் ரஜியாபானு, பள்ளித் தாளாளா் ஹ. பீா்முகம்மது, தலைமையாசிரியா் சு. முத்து உள்பட பலா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com