திருநெல்வேலி மண்டலம் 25ஆவது வாா்டுக்குள்பட்ட தமிழ்ச்சங்க தெரு, அண்ணா தெரு, போஸ் மாா்க்கெட், நான்கு ரதவீதி, சுடலைமாடன் கோயில் தெரு, அப்பா் தெரு, சத்தியமூா்த்தி தெரு, தெப்பகுளத் தெரு, வலம்புரி அம்மன் தெரு, சுந்தரதோழா் தெரு, தண்டியல் சாவடி தெரு, பருவத சிங்கராஜா தெரு, தெற்கு தெரு, நயினாா் குளம், பள்ளிவாசல் தெரு, நயினாா் குளம் சாலை, சுவாமி சந்நிதி, திருநெல்வேலி நகரம் காவல்நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மேயா் கோ.ராமகிருஷ்ணன் சைக்கிளில் சென்று கழிவுநீா் ஒடை சுத்தப்படுத்தும் பணி, குப்பைகளை அகற்றும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.