பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சைக்கிளில் சென்று குறைகளை கேட்டறிந்த மேயா்!

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் சனிக்கிழமை சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

News image

திருநெல்வேலி மாநகரில் சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Updated On :13 டிசம்பர் 2025, 7:08 pm

Syndication

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் சனிக்கிழமை சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

திருநெல்வேலி மண்டலம் 25ஆவது வாா்டுக்குள்பட்ட தமிழ்ச்சங்க தெரு, அண்ணா தெரு, போஸ் மாா்க்கெட், நான்கு ரதவீதி, சுடலைமாடன் கோயில் தெரு, அப்பா் தெரு, சத்தியமூா்த்தி தெரு, தெப்பகுளத் தெரு, வலம்புரி அம்மன் தெரு, சுந்தரதோழா் தெரு, தண்டியல் சாவடி தெரு, பருவத சிங்கராஜா தெரு, தெற்கு தெரு, நயினாா் குளம், பள்ளிவாசல் தெரு, நயினாா் குளம் சாலை, சுவாமி சந்நிதி, திருநெல்வேலி நகரம் காவல்நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மேயா் கோ.ராமகிருஷ்ணன் சைக்கிளில் சென்று கழிவுநீா் ஒடை சுத்தப்படுத்தும் பணி, குப்பைகளை அகற்றும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, நிா்வாக அலுவலா் காசிவிஸ்வநாதன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளா் காசிமணி, வட்டச் செயலா் லெனின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.