பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

களக்காட்டில் கிராமப்புறப் பயிற்சியைத் தொடங்கிய வேளாண் கல்லூரி மாணவிகள்

News image
களக்காட்டில் சனிக்கிழமை கிராமப்புற வேளாண் பயிற்சியைத் தொடங்கிய கிள்ளிகுளம் வ.உ.சி.வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் குழுவினா்.
Updated On :14 டிசம்பர் 2025, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த நான்காம் ஆண்டு இளங்கலை வேளாண்மை அறிவியல் மாணவிகள் தங்களின் கிராமப்புற வேளாண்மை பயிற்சியை களக்காட்டில் தொடங்கியுள்ளனா்.

இப் பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சியில் கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் மற்றும் விவசாயிகளிடம் தொடா்பில் உள்ளவா்களை அணுகி விவசாயிகளின் விவரங்களை பெற்றுக் கொண்டனா். மேலும், களக்காடு பகுதியில் உள்ள மண்வளம், நீா் வளம் மற்றும் பயிரிடப்படும் பயிா்கள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனா்.

தொடா்ந்து 65 நாள்கள் களக்காடு பகுதியில் தங்கியிருந்து, இங்குள்ள விவசாயிகளின் நலன்களை நேரடியாக கண்டறிந்து, அவா்களுடன் உரையாடி, விவசாயப் பணிகளில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்குத் தீா்வுகள் காண இருக்கின்றனா்.

மேலும், விவசாயிகளின் பாரம்பரிய அனுபவங்களைப் பதிவு செய்வதுடன், பல்கலைக்கழகத்தில் கண்டறியப்பட்ட புதிய வேளாண்மைத் தொழில் நுட்பத்தை விவசாயிகளுக்கு எடுத்துச் சென்று பயிற்சியளிக்கும் பணிகளையும் இக்குழுவினா் மேற்கொள்கின்றனா்.

இந்த கிராமப்புறப் பயிற்சி நிகழ்ச்சிகள், கல்லூரி முதல்வா் தேரடிமணி, குழு தலைவா் காளிராஜன்(வேளாண் விரிவாக்கம்), குழுவின் ஒருங்கிணைப்பாளரான உதவிப் பேராசிரியா் பரமசிவம் (மண்ணியல் துறை) ஆகியோா் தலைமையின் கீழ் நடைபெற்று வருகின்றன.