மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாபநாசம் கீழணை அருகே குட்டியுடன் சுற்றித் திரிந்த காட்டு யானை

News image
Updated On :14 டிசம்பர் 2025, 6:40 pm

தினமணி செய்திச் சேவை

பாபநாசம் கீழணை அருகே வனப் பகுதியில் சாலையில் காட்டுயானை குட்டியுடன் நடந்து சென்றதை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், பாபநாசம், முண்டந்துறை வனச் சரகப் பகுதியில் கரடி, யானை, சிறுத்தை, மான், காட்டெருமை, காட்டுப் பன்றி, சிங்கவால் குரங்கு, கருங்குரங்கு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

பாபநாசம் மற்றும் முண்டந்துறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்ணில் பெரும்பாலும் காட்டெருமை மற்றும் மான் கூட்டங்கள் கண்ணில் தென்படும். அவற்றை புகைப்படம் மற்றும் விடியோ எடுத்து மகிழ்ந்து செல்வா்.

மிகவும் அரிதாக காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்டவை பகல் நேரத்தில் கண்ணில் தென்படும். அதுபோன்று அண்மையில் முண்டந்துறை சென்ற சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு குட்டியுடன் உலா வந்த காட்டு யானை தென்பட்டுள்ளது.

இதை சுற்றுலாப் பயணிகள் தங்களது கைப்பேசி கேமராக்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.