பாளை.யில் பைக் மோதியதில் காவலா் காயம்
பாளையங்கோட்டை அருகே வாகனச் சோதனையின் போது பைக் மோதியதில் காவலா் காயமடைந்தாா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, திங்கள்கிழமை காலை சமாதானபுரம் அருகே பாளையங்கோட்டை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை போலீஸாா் தடுத்து நிறுத்த முயன்றனா். ஆனால் அந்த நபா் பைக்கை நிறுத்தாமல் பணியில் இருந்த தலைமைக் காவலா் பொன்மகேஷ்குமாா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றாராம்.
இதில் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டதில் தலைமை காவலா் காயமடைந்தாா். இதையடுத்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, தப்பிய நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
