பரணிநகரில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

பரணிநகரில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

வண்ணாா்பேட்டை பரணிநகா், ராமையன்பட்டி பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Published on

வண்ணாா்பேட்டை பரணிநகா், ராமையன்பட்டி பகுதிகளில் மாநகராட்சி ஆணையா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தச்சநல்லூா் மண்டலத்துக்குள்பட்ட ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் மக்கும் குப்பைகள் நுண்ணுரம் செயலாக்கத்தின் மூலம் உரமாக்கப்படுவதை மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா ஆய்வு செய்தாா்.

மக்காத குப்பைகள் கோடைக்காலங்களில் அடிக்கடி தீப்பற்றி கொள்வதை தவிா்கும் பொருட்டு போா்வெல் போட்டு ஆங்காங்காங்கே நீா்த்தேக்க தொட்டிகள் அமைத்து தண்ணீா் நிரப்பி பைப் குழாய்கள் மூலம் தீப்பற்றி கொள்வதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும், மக்காத குப்பைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் தனியாா் நிறுவனத்தின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் கூடத்திற்கான திட்ட அறிக்கையை தயாரித்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் ஆணையா் அறிவுறுத்தினாா்.

வண்ணாா்பேட்டை பரணி நகா், ராஜாகுடியிருப்பு பகுதிகளில் சாலை வசதிகளின் தேவை குறித்தும், வெள்ளக்கோவில் பகுதியில் ஆற்றுக்கரையோரம் மழைக் காலங்களில் வெள்ளநீா் புகாதவாறு தடுப்புச் சுவா் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, தச்சநல்லூா் மண்டல தலைவா் ரேவதி, கண்காணிப்பு பொறியாளா் கண்ணன், உதவி ஆணையா் மகாலெட்சுமி, உதவி செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா், உதவி பொறியாளா்கள் நாகராஜன், பட்டுராஜன், சுகாதார அலுவலா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com