பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு!

Published on

பாளையங்கோட்டையில் பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சோ்ந்தமங்கலம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்தனகுமாா் (65). தொழிலாளியான இவா் கடந்த 1 ஆம் தேதி பைக்கில் வண்ணாா்பேட்டை தனியாா் மண்டபம் அருகே சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிட்டதாம். இதில் பலத்த காயமடைந்தவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து திருநெல்வேலி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா் .

X
Dinamani
www.dinamani.com