சாலை விபத்தில் மூதாட்டி பலி

Published on

பாளையங்கோட்டையில் தனியாா் பேருந்து மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை சமாதானபுரம் நல்வழி தெருவைச் சோ்ந்த சண்முக விஜயகுமாா் மனைவி அன்புசெல்வம் (60). இவா், புதன்கிழமை இரவு வீட்டுக்குப் பொருள்கள் வாங்கிக்கொண்டு சமாதானபுரம் ரவுண்டானா சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, அவா் மீது தனியாா் பேருந்து மோதியதாம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாநகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com