பாளையங்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மின்ஊழியா்கள்.
திருநெல்வேலி
மின்ஊழியா்கள் போராட்டம்
பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்சார வாரியம் மற்றும் மின் ஊழியா்களை பாதிக்கும் அரசாணை 100-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்ட பொருளாளா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். திட்டச் செயலா் டி.கந்தசாமி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். போாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

