போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த இளைஞரை வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த இளைஞரை வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா்.

தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன்(20). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்குமிடையை பழக்கம் இருந்து வந்ததாம். இதையடுத்து, சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற இசக்கியப்பன், அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இதையடுத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இசக்கியப்பனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com