தாமிரவருணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எலியாஸ் இவரது மகன் மார்க் ஆண்டனி இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் இன்று அவரது நண்பர் ஆறு பேருடன் தாமிரவருணி ஆற்றின் மணி மூர்த்தீஸ்வரர் அருகே குளிக்க சென்று உள்ளனர்.
எதிர்பாராத விதமாக மார்க் ஆண்டனி தண்ணீரில் மூழ்கினார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்து அவரது நண்பர்கள் உடனடியாக அருகில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்களும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்து விரைந்து வந்த அவர்கள் மார்க் ஆண்டனியை மீட்டனர். அப்பொழுது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த மகனின் உடலை பார்த்து அவரது தந்தை யார் கதறி அழுத சம்பவம் காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.