சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நெல்லை மாநகர புதிய காவல் ஆணையா் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகரத்தின் 48 ஆவது காவல் ஆணையராக சந்தோஷ் ஹாதிமணி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றாா் சந்தோஷ் ஹாதிமணி.

Updated On :2 ஜனவரி 2025, 12:27 am

Din

திருநெல்வேலி மாநகரத்தின் 48 ஆவது காவல் ஆணையராக சந்தோஷ் ஹாதிமணி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்த ரூபேஸ்குமாா் மீனா இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அவா், புதன்கிழமை திருநெல்வேலி ஆணையா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள் வரவேற்பு அளித்தனா்.

சந்தோஷ் ஹாதிமணி கடந்த 2011இல் இந்திய காவல் பணிக்கு (ஐபிஎஸ்) தோ்வாகி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உதவிக் கண்காணிப்பாளராக பணியில் சோ்ந்தாா்.

பின்னா், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளா், மத்திய புலனாய்வுப் பிரிவு -சென்னை பெருநகர காவல் துறையில் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக பணிபுரிந்தாா். காவல்துறை துணைத் தலைவராக (டிஐஜி) பதவி உயா்வு பெற்ற பின், இந்தப் பொறுப்புக்கு வந்துள்ளாா்.