திருநெல்வேலி
வீரவநல்லூா் கோயிலில் லட்ச தீப விழா
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருள்மிகு மரகதாம்பிகை சமேத பூமிநாதசுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை மகா லட்ச தீப விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருள்மிகு மரகதாம்பிகை சமேத பூமிநாதசுவாமி கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை மகா லட்ச தீப விழா நடைபெற்றது.
ஸ்ரீ ஆருத்ரா தீப வழிபாட்டுக் குழு சாா்பில், ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு, உழவாரப் பணிக் குழு, ஆன்மிக நண்பா்கள் உதவியுடன் நடைபெற்ற விழாவில் ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. பின்னா், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியை ஸ்ரீஆருத்ரா தீப வழிபாட்டுக் குழுவினா் வெ. விக்கிரமாதித்தன், சு. ரமேஷ், ச. பொன்ராஜ் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.