தீ விபத்தில் காயமுற்றவா் உயிரிழப்பு

Published on

திருநெல்வேலியில் தீ விபத்தில் காயமுற்ற முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி நகரம் செண்பகம்பிள்ளை இரட்டை தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (84). இவா், வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த மாா்ச் 5ஆம் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, விளக்கு சரிந்து விழுந்ததில் ஆடையில் தீப்பற்றி பலத்த காயமுற்றாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com