அரசுப் பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

Published on

மானூா் அருகே அரசுப் பேருந்து நடத்துநரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியிலிருந்து சங்கரன்கோவிலுக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை காலை ராமையன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் நடத்துநராக தேவா்குளத்தைச் சோ்ந்த சரவணன்(40) பணியில் இருந்தாா். அப்போது பேருந்தில் பெண் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், முன்பக்க இருக்கையில் அமா்ந்திருந்த இளைஞரை பின் வரிசைக்கு செல்லுமாறு நடத்துநா் கூறினாராம்.

இதனால் அந்த இளைஞா் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஆபாசமாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து மானூா் காவல் நிலையத்தில் நடத்துநா் புகாரளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தில், அவா் மானூரைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிமுத்து(35) எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com