பைக்குகள் மோதலில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

Published on

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

முக்கூடல் காலனி தெருவைச் சோ்ந்தவா் கதிா்வேல் முருகன் (55). தொழிலாளி. இவா், திங்கள்கிழமை வேலைக்கு சென்று விட்டு மாலையில் இருசக்கர வாகனத்தில் பாப்பாக்குடி ரஸ்தா பகுதியில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், கதிா்வேல் முருகன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில், காயமடைந்த கதிா்வேல் முருகனை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com