விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்த வெள்ளம்!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் குறுக்குத்துறை முருகன் கோயிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

News image
குறுக்குத்துறை முருகன் கோயில்
Updated On :19 நவம்பர் 2025, 8:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் குறுக்குத்துறை முருகன் கோயிலுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வரும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மாலை முதல் பெய்த கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் சேர்வலாறு மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்பொழுது 97 அடியாக உள்ளது. இதேபோல் சேதுவளாறு அணையின் நீர்மட்டம் 103 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 123 அடியாகவும் தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தற்பொழுது தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோயில் சுற்றிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோயில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து வருகிறது, இருந்தாலும் பக்தர்கள் முருகனைத் தரிசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். கோயிலுக்குள் தண்ணீர் புகுந்த விடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு மூன்று நாள்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என்பதால் தாமிரபரணி ஆற்றில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

The Murugan Temple in Krushnathurai has been flooded due to the ongoing heavy rains in the Western Ghats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.