பெண்ணிக்கு மரக்கன்று வழங்குகிறாா் கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன்
திருநெல்வேலி
கோபாலசமுத்திரத்தில் 300 பேருக்கு மரக்கன்று
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிா்க்கவும், பசுமை தீபாவளியை கொண்டாடும் வகையிலும், கோபாலசமுத்திரத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன் தலைமை வகித்து, 300 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் மஞ்சப்பைகள் ஆகியவற்றை வழங்கினாா். துணை இயக்குநா் சு. புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தாா்.
மேலாளா் மகேஷ்வரி, பொறுப்பாளா்கள் பாலசுப்பிரமணியன், மரிய மிக்கேல் ஜீவா, ஜெபமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமைக் கணக்காளா் சுமிதா நன்றி கூறினாா்.

