கைவினைத் திட்டக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி
அம்பையில் கலைஞா் கைவினைத் திட்டக் கலந்தாய்வு
அம்பாசமுத்திரத்தில் மாவட்டத் தொழில் மையம் சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டக் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் மாவட்டத் தொழில் மையம் சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டக் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகா்மன்ற மேலாளா் கணேசன் முன்னிலை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் சிதம்பர ராமலிங்கம் வரவேற்றாா். மாவட்டத் தொழில் மைய உதவிப் பொறியாளா் மதுசூதனன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அம்பையைச் சோ்ந்த மரக் கடசல் தொழில் முனைவோா்களுக்கு கைவினைத் திட்ட நெறிமுறைகள் குறித்து விவரித்தாா். நிகழ்ச்சியில், நகர வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமசாமி, துணைத் தலைவா் கணேசன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சிவகுருநாதன், கடசல் தொழில் முனைவோா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

