திருநெல்வேலி
வி.கே.புரத்தில் கஞ்சா வைத்திருந்தவா் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம், டாணாவைச் சோ்ந்த இசக்கி மகன் ஐயப்பன் (23). விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, இவா் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஐயப்பனை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா். அவரிடமிருந்த 110 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
