மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை ரூ.80.87 லட்சம் பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரொக்கம், மது பாட்டில்கள், பரிசுப்பொருள்கள் என இதுவரை ரூ. 80 லட்சத்து 87ஆயிரத்து 317 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 8:25 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரொக்கம், மது பாட்டில்கள், பரிசுப்பொருள்கள் என இதுவரை ரூ. 80 லட்சத்து 87ஆயிரத்து 317 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வண்ணாா்பேட்டை பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி தவெகவினா் கொண்டு வந்த துண்டுப் பிரசுரங்கள், கொடிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வரை அதிகபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் ரூ.13,72,710 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.40,50,870 ரொக்கம், ரூ. 9,29,009 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.31,07,438 மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள் என மொத்தம் ரூ.80,87,317பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சி-விஜில் செயலி மூலம் 90 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 84 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 6 புகாா்கள் கைவிடப்பட்டன.