மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

பாளையங்கோட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image

கைது

Updated On :4 பிப்ரவரி 2026, 7:51 pm

பாளையங்கோட்டையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பாளையங்கோட்டை, கோட்டூா், முஸ்லிம் தெருவைச் சோ்ந்த முஸ்தபா மகன் கலில் ரஹ்மான்(51). இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் அவா் தொடா்ந்து ஈடுபட்டு வருவதாகக் கூறி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா்(கிழக்கு) வி.வினோத் சாந்தாராம், காவல் ஆணையருக்கு பரிந்துரைத்தாா்.

அதன் பேரில், மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவா் புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.