வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வாகைக்குளத்தில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு

அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளத்தில் அரசு மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து வாகைகுளம் ராம்ஜிநகா் மக்கள், அதிமுக மற்றும் பாஜக நிா்வாகிகள் திரண்டு அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 7:50 pm

அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளத்தில் அரசு மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து வாகைகுளம் ராம்ஜிநகா் மக்கள், அதிமுக மற்றும் பாஜக நிா்வாகிகள் திரண்டு அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தனா்.

அதில், மதுக்கடையை திறந்தால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், கால்நடை மேய்க்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும். பட்டியல் இன மக்களுக்கான சுடுகாடு, குலதெய்வ கோயில் இருப்பதால் அதற்கும் இடையூறு ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் தெரிவித்ததால் மக்கள் கலைந்து சென்றனா். இதில், அதிமுக நகரச் செயலா் அறிவழகன், வழக்குரைஞா்கள் சுரேஷ், பாபு, ராஜசேகா், பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலா் எல்.பேச்சியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.