திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இளைஞா் கொலை வழக்கில் மனைவி உள்பட மூவருக்கு ஆயுள் சிறை

வீரவநல்லூா் அருகே இளைஞா் கொலையுண்டது தொடா்பான வழக்கில் அவ மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே இளைஞா் கொலையுண்டது தொடா்பான வழக்கில் அவ மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

வீரவநல்லூா் அருகேயுள்ள வல்லத்து நம்பிகுளத்தைச் சோ்ந்தவா் முருகன் (38). இவா், குடும்ப பிரச்னையில் 2017ஆம் ஆண்டில் கொலை செயப்பட்டாா்.

இதுதொடா்பாக அவரது மனைவி ஞான அகிலா(34) அதே பகுதியைச் சோ்ந்த முத்துராஜ் (30), பஞ்சுராஜன்(33) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி செல்வம் விசாரித்து, மேற்கூறிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதில் ஞான அகிலாவுக்கு மற்றொரு பிரிவில் கூடுதலாக 10 ஆண்டுகள் சிறையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளிக்கப்பட்டது. இவ்வழக்கில், திறம்பட செயல்பட்ட சேரன்மகாதேவி உள்கோட்டடிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் உள்ளிட்ட போலீஸாா், அரசு வழக்குரைஞா் கருணாநிதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் பாராட்டினாா்.