மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நெல்லையப்பா் கோயிலில் முதிய தம்பதிகள் சிறப்பிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகள் செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட்டனா்.

News image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தம்பதிகள்.

Updated On :10 பிப்ரவரி 2026, 7:37 pm

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகள் செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட்டனா்.

இதையொட்டி, கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் 142 தம்பதிகளுக்கு தலா ரூ.2,500 மதிப்புள்ள வேஷ்டி- சட்டை, புடவை மற்றும் சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

மேயா் திரு ராமகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை திருநெல்வேலி இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி, அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா, கோயில் செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன், கண்காணிப்பாளா் முருகன், திருநெல்வேலி மேற்கு பிரிவு ஆய்வாளா் தனலட்சுமி என்ற வள்ளி உள்பட பலா் கலந்துகொண்டனா்.