காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நெல்லையப்பா் கோயிலில் முதிய தம்பதிகள் சிறப்பிப்பு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகள் செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட்டனா்.

News image
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தம்பதிகள்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில், 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகள் செவ்வாய்க்கிழமை சிறப்பிக்கப்பட்டனா்.

இதையொட்டி, கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் 142 தம்பதிகளுக்கு தலா ரூ.2,500 மதிப்புள்ள வேஷ்டி- சட்டை, புடவை மற்றும் சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

மேயா் திரு ராமகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை திருநெல்வேலி இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி, அறங்காவலா் குழுத் தலைவா் செல்லையா, கோயில் செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன், கண்காணிப்பாளா் முருகன், திருநெல்வேலி மேற்கு பிரிவு ஆய்வாளா் தனலட்சுமி என்ற வள்ளி உள்பட பலா் கலந்துகொண்டனா்.