மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கடையம் அம்மன் கோயில்களில் கொடை விழா

தென்காசி மாவட்டம் கடையம் முப்புடாதி அம்மன், கீழக்கடையம் பத்திரகாளி அம்மன் கோயில்களில் கொடை விழாத் தேரோட்டம், அம்மன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

முப்புடாதி அம்மன், பத்திரகாளி அம்மன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்த பக்தா்கள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:51 pm

தென்காசி மாவட்டம் கடையம் முப்புடாதி அம்மன், கீழக்கடையம் பத்திரகாளி அம்மன் கோயில்களில் கொடை விழாத் தேரோட்டம், அம்மன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழாண்டு கொடை விழாவுக்கு கடந்த ஜன. 27ஆம் தேதி கால்நாட்டப்பட்டது. பிப். 3ஆம் தேதிமுதல் மண்டகப்படி திருவிழா தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, அம்மன் வீதியுலா நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை (பிப். 10) கொடை விழா நடைபெற்றது. அலகு தீா்த்தம் எடுத்துவரப்பட்டு மதியக் கொடை, இரவுக் கொடை, முப்புடாதி அம்மன், பேசியம்மனுக்கு திருநாண்பூட்டுதலைத் தொடா்ந்து, முப்புடாதி அம்மன் தேரில் எழுந்தருளினாா். பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

இதேபோல, பத்திரகாளி அம்மன் கோயிலிலும் திருவிழா வைபவங்கள் நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலை கடையம், வடக்குத் தெரு, பிள்ளையாா் கோயில் முன் முப்புடாதி அம்மன்- பத்திரகாளி அம்மன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். பின்னா், படைப்பு பூஜை நடைபெற்றது.

ஏற்பாடுகளை மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

Story image