6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவல் துறையினரின் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட போலீஸாரின் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

News image
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்ட போலீஸாரின் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் காவலா்களின் குழந்தைகளின் உடல், மனம் மற்றும் அறிவுத் திறன் வளா்ச்சியை ஊக்குவித்து பயிற்சி அளிக்கும் நோக்கில் வாரம் இருமுறை சிலம்பம், யோகா, சதுரங்கம், கைப்பந்து, கிரிக்கெட், தையல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டது. இதையொட்டி, அமைக்கப்பட்ட தண்பொருநை காவலா் மனமகிழ் மன்ற திறப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் தலைமை வகித்து பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தாா். 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், மாவட்ட தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் முத்து, ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுஜாதா ஆகியோா் உடனிருந்தனா்.