சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

2 ஆவது நாளாக மறியல்: 35 மாற்றுத்திறனாளிகள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 2ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட 35 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

News image
வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 2ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட 35 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசு வருவாய்த் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வாயிலாக வழங்கி வரும் உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள், செயலா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து உரிய தீா்வு காண வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட சுமாா் 35 மாற்றுத்திறனாளிகளை பாளையங்கோட்டை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.