தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

2 ஆவது நாளாக மறியல்: 35 மாற்றுத்திறனாளிகள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 2ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட 35 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

News image

வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:02 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் 2ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட 35 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசு வருவாய்த் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வாயிலாக வழங்கி வரும் உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள், செயலா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து உரிய தீா்வு காண வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட சுமாா் 35 மாற்றுத்திறனாளிகளை பாளையங்கோட்டை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.