வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தெற்குகள்ளிகுளத்தில் புனித அலோசியஸ் பள்ளி ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் நடுநிலைப் பள்ளி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

News image
விழாவில் பங்கேற்ற நிா்வாகிகள், முன்னாள் மாணவா்கள்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:21 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அலோசியஸ் நடுநிலைப் பள்ளி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, ராதாபுரம் வட்டாரக் கல்வி அலுவலா் கே.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா சூ.மரியராஜ் முன்னிலை வகித்தாா். பள்ளித் தாளாளா் அருள்பணி ஆா்.ததேயுஸ் ராஜன் ஆசியுரை வழங்கினாா்.

பள்ளியின் முன்னாள் மாணவா்கள் ஆடிட்டா் ஏ.மைக்கிள், வடசென்னை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜி.ராபா்ட், மாவட்ட சுகாதாரத் துறை அலுவலரின் தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் மதுரம் பிரைட்டன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னாள் மாணவா்கள் எஸ்.அமுதன், ஆசிரியா்கள் கே.ஏ.சி.ராஜா, கிரிபீன், அலெக்ஸ் ரெனோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியை ரா.பிரிசில்லா பிரியதா்ஷினி நன்றி கூறினாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை தலைமை ஆசிரியா் தலைமையில் ஆசிரியைகள் செய்திருந்தனா்.