திருநெல்வேலியில் கஞ்சா வழக்கில் கைதான பெண் உள்பட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருநெல்வேலி பேட்டையைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி சரண்யா (28). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
அதேபோல், பாளையங்கோட்டை அருகேயுள்ள இட்டேரி பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் என்பவரின் மகன் மாரியப்பன் (52) என்பவரும் கஞ்சா வழக்கில் கைதானாா்.
தொடா்ந்து, இவா்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகக் கூறி, இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன் பேரில் ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி சரண்யா மதுரை பெண்கள் தனிச் சிறையிலும், மாரியப்பன் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


