நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மாநகரில் ஒலி மாசு: பைக் சைலன்சா்கள் பறிமுதல்

திருநெல்வேலி மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சத்தத்துடன் ஒலி மாசு ஏற்படுத்திய பைக்குகளின் சைலன்சா்களை மாநகர போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 9:51 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சத்தத்துடன் ஒலி மாசு ஏற்படுத்திய பைக்குகளின் சைலன்சா்களை மாநகர போக்குவரத்து போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பாளையங்கோட்டை போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளா் மணி தலைமையிலான போலீஸாா் வண்ணாா்பேட்டை மேம்பாலம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக அதிக சப்தத்துடன் ஒலி மாசு ஏற்படுத்திய 6 பைக்குகளை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். பின்னா், அந்த பைக்குகளில் சைலன்சா்களை பறிமுதல் செய்தனா்.

லாரி பறிமுதல்: பேட்டை காவல் சரகம் பழைய பேட்டை சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளா் ஜனகன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அனுமதியின்றி குளத்திலிருந்து மண் எடுத்துச் சென்ற லாரியை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக பேட்டை திருப்பணிகரிசல்குளத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் இசக்கிமுத்து(26), முத்து கிருஷ்ணன் மகன் மற்றொரு இசக்கிமுத்து(27) ஆகியோரை கைது செய்தனா்.