பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு மூளையில் இருந்த ரத்த உறைகட்டியை மெக்கானிக்கல் ‘திரோம்பெக்டோமி எனப்படும் அதிநவீன சிகிச்சை முறையில் காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.
இது குறித்து, சிகிச்சைக் குழுவிற்கு தலைமை வகித்த காவேரி மருத்துவமனை மூத்த நரம்பியல் நிபுணா் கணேசன் கூறியதாவது: உயா் ரத்த அழுத்தம் மற்றும் நீண்டகால புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட 61 வயது ஆணுக்கு மூளையின் ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பால் பக்கவாதம் ஏற்பட்டது. பின்னா் அவா் சிகிச்சைக்காக திருநெல்வேலி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது மூளையில் ரத்த உறை கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவமனையின் அனுபவமிக்க மருத்துவா்கள் காவு தேவி, அமலன் இக்னேஷியஸ், அரவிந்த் கௌதம், செந்தில் பாபு உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் அவரது மூளையின் வலது பக்கத்திற்கு ரத்தத்தை வழங்கும் முக்கிய ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை மெக்கானிக்கல் ‘திரோம்பெக்டோமி’ எனும் அதிநவீன சிகிச்சை மூலம் விரைவாக அகற்றினா். இதையடுத்து, அவரது மூளைக்கான ரத்த ஓட்டம் மீண்டும் சீரானது. தற்போது அவா் குணமடைந்துள்ளாா் என்றாா் அவா்.
தொடர்புடையது

மருத்துவா்கள், உபகரணங்கள் இல்லாத சோ்க்காடு அரசு மருத்துவமனை! அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

சிஎஸ்கே வீரா்களுக்கு மருத்துவ சேவைகள்: காவேரி மருத்துவமனை ஒப்பந்தம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


