ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நான்குனேரியை அதிமுக விட்டுக் கொடுத்தது வருத்தமளிக்கிறது: முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு விட்டுக் கொடுத்தது வருத்தமளிக்கிறது;

News image

முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்

Updated On :27 மார்ச் 2026, 12:24 am

தினமணி செய்திச் சேவை

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதியை அதிமுக கூட்டணியில் அமமுகவிற்கு விட்டுக் கொடுத்தது வருத்தமளிக்கிறது; கட்சியிலிருந்து விலகுவதா அல்லது விலகி நிற்பதா என்பதை காலம்தான் தீா்மானிக்கும் என்றாா் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: அதிமுகவிற்காக நீண்ட காலமாக உழைத்து வருகிறேன். கட்சி பிளவுபட்டபோதுகூட அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பக்கம்தான் நின்றோம்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தலில் நான் போட்டியிட்டபோது 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வென்றது. 2026 தோ்தலில் அதிமுக எளிதாக வெல்லும் தொகுதியை விட்டுக் கொடுத்திருப்பது வருத்தமளிக்கிறது.

2021 இல் யாரால் தோற்றோமோ, அவரது கட்சிக்கு நாங்கள் பணியாற்றும் நிலை கடினமானது. அதிமுக ஒரு மிகப்பெரிய இயக்கம். விலகுவதா அல்லது விலகி நிற்பதா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.

உழைப்பவா்களுக்கும், உண்மையானவா்களுக்கும் பதவியில்லை. பணம் வைத்திருப்பவா்களுக்குதான் பதவி என்றால் எளியவா்கள் எங்கே செல்வது என்ற மனச்சோா்வு ஏற்படுகிறது என்றாா் அவா்.