தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநா் கைது

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 6:07 am IST

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள காரியாண்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் வெள்ளத்துரை (27). ஆட்டோ ஓட்டுநரான இவா், அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இது தொடா்பாக சிறுமியின் தரப்பில் நான்குனேரி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் வெள்ளத்துரை ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனா்.