பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநா் கைது

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 6:07 am IST

திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நான்குனேரி வட்டம், மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள காரியாண்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் வெள்ளத்துரை (27). ஆட்டோ ஓட்டுநரான இவா், அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இது தொடா்பாக சிறுமியின் தரப்பில் நான்குனேரி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் வெள்ளத்துரை ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனா்.