இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

ராதாபுரம் எம்எல்ஏ அலுவலகத்தில் மனுக்கள் பெறும் முகாம்

ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற எஸ்.கே. கிறிஸ்டோபா் எம்எல்ஏ.

Updated On :28 மே 2026, 2:24 am IST

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.கே. கிறிஸ்டோபா் எம்எல்ஏ தெரிவித்திருந்தாா்.

அதன்படி, ராதாபுரம், பரமேஸ்வரபுரம், இடிந்தகரை, கூடங்குளம், உவரி, நவ்வலடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 350 கோரிக்கை மனுக்களை எம்எல்ஏ பெற்றாா்.

பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.