ஆழ்வார்தோப்பு காந்தீஸ்வரம் சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை(ஜூலை 22) ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள ஆழ்வார்தோப்பு தாமிரவருணி நதிக் கரையோரம் காந்தீஸ்வரத்தில் ஏகாந்தலிங்க சுவாமி சமேத அறம் வளர்த்த நாயகி அம்பாள் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் சிறப்புவழிபாடுகள் நடத்தப்பட்டுகிறது. நிகழாண்டு ஆடி வெள்ளிக்கிழமைகளில் அறம்வளர்த்த நாயகி அம்பாளுக்கு மாலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரம், லலிதா சகஸ்கர நாம பாராயணம் மற்றும் குங்கும அர்ச்சனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
இதில், ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 5ஆம் தேதி அறம் வளர்த்த நாயகி அம்பாளுக்கு வளையல் அலங்காரம், லலிதா சகஸ்கர நாம பாராயணம் மற்றும் குங்கும அர்ச்சனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.