காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் பெண்கள் கழக சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
முதலாமாண்டு தமிழ்த் துறை மாணவி எஸ். முத்து பாஹிமா கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். சு.ஏஞ்சல் லதா அறிமுகவுரையாற்றினார்.
பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரி உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறைப் பேராசிரியை ஜோ. சிந்தியா ஜூலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியை த.சாந்தாதேவி நன்றி கூறினார்.