தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கான குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 6) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கான குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த் தலைவர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேசலாம்.
மேலும், அந்தப் பொருள் மீதான கருத்துகள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதால் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.