பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது

சாத்தான்குளம் அருகே குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய கட்டடத் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

சாத்தான்குளம் அருகே குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை தாக்கிய கட்டடத் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
அதிசயபுரத்தைச் சேர்ந்த வில்சன் மனைவி தங்கம் (35). இவரும் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி த. விசாலம் (45) என்பவரும் தெருக்குழாயில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் பிடித்தனராம். அப்போது குடிநீர் பிடிப்பது தொடர்பாக இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் விசாலம் ,தங்கத்தை அவதூறாக பேசியதுடன் அவரை தாக்கி மிரட்டினாராம்.  இதுகுறித்து தங்கம் தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் வழக்குப் பதிந்து விசாலத்தை கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com