கோவில்பட்டி அருகே கல் குவாரியில் பொக்லைன் இயந்திரம் சரிந்ததில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கொப்பம்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டியில் கல் குவாரி உள்ளது. அங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் சரள் கல்லை அள்ளும் பணி நடந்ததாம். இதற்காக கயத்தாறையடுத்த ராஜாபுதுக்குடி பாளையபுரம் காலனி தெருவைச் சேர்ந்த வாசு மகன் வினோத்குமார் (22) பொக்லைன் இயந்திரத்தை இயக்கினாராம். அப்போது பொக்லைன் இயந்திரம் ஒருபக்கமாக சரியும் நிலையில் இருந்ததையறிந்த வினோத்குமார் அதிலிருந்து குதித்தாராம். அப்போது, பொக்லைன் இயந்திரமும் சரிந்து விழுந்ததில் வினோத்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்தவுடன் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.