கோவில்பட்டி வித்ய பிரகாசம் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை மற்றும் வித்ய பிரகாசம் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன் தலைமை வகித்து, சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கிவைத்துப் பேசினார். தொடர்ந்து, மாணவர், மாணவிகளுக்கு கரும்பு மற்றும் இனிப்புகளை அலுவலர் வழங்கினார். நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா முன்னிலை வகித்தார். இதில், அறக்கட்டளை பொறுப்பாளர்கள் சேர்மராஜன், அய்யப்பசாமி, மாணவர், மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.