கோவில்பட்டி அருகேயுள்ள ஆவல்நத்தம் விவசாய தோட்ட கிணற்றில் பெண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
ஆவல்நத்தத்தில் கிருஷ்ணசாமி மகன் கோபால்சாமிக்குச் சொந்தமான தோட்ட கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, போலீஸார் அங்கு சென்று தீயணைப்புப் படையினர் உதவியுடன் பெண் சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்தனர்.
இறந்த பெண்ணுக்கு சுமார் 45 வயது இருக்கும் என்றும், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.