ஆறுமுகனேரி விநாயகர் கோயில் தெரு சைவ சித்தாந்த சங்கத்தில் மார்கழி பஜனை நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இச்சங்கத்தில் மார்கழி மாதம் முழுவதும் பஜனை நடைபெற்றது. தினமும் அதிகாலை 5 மணிக்கு பஜனைக்குழு முக்கிய வீதி வழியாக வலம் வந்து சங்கத்தில் பூஜை நடைபெற்று வந்தது.
தை 1ஆம் தேதி நடைபெற்ற பஜனை நிறைவு விழாவுக்கு, சைவ வேளாளர் சங்கத் தலைவர் ஜெ.சங்கரலிங்கம் தலைமை வகித்தார். பக்த ஜன சபை செயலர் பி.கே.எஸ்.கந்தையா பிள்ளை, முத்துராமன், பொருளாளர் சே.கற்பகவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பஜனையில் பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆறுமுகனேரி அரிமா சங்கத் தலைவர் ஜெ.நடராஜன், டிசிடபிள்யூ நிறுவன ஓய்வுபெற்ற பணியாளர் விசு என்ற வி.சுப்பிரமணியம்,சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி முதல்வரின் நேர்முக உதவியாளர் க.இளையபெருமாள், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.