வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ சேதம்

தூத்துக்குடியில் திங்கள்கிழமை இரவு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை சேதப்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை இரவு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை சேதப்படுத்திச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் கார்த்திக் (25). இவர்,  சொந்தமாக சுமை ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். வழக்கம்போல, கார்த்திக் தனது  ஆட்டோவை திங்கள்கிழமை இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றாராம்.செவ்வாய்க்கிழமை காலை அவர் சென்று பார்த்தபோது ஆட்டோவின்  கண்ணாடி உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.  இதுதொடர்பாக கார்த்திக் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com