ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய மாநில அரசுகள் இளைஞர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து நிரந்தரமாக ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.