செய்துங்கநல்லூர் இளைஞர் கொலை வழக்கில் இருவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.
செய்துநங்கநல்லூரில் உள்ள நேசமணித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வேதமுத்து மகன் செல்வகுமார் (35). சரக்கு வாகன ஓட்டுநர். இவருக்கு
மனைவி, மகள் உள்ளனர். கடந்த 21ஆம் தேதி செய்துங்கநல்லூரில் தலை துண்டித்து செல்வகுமார் கொலை செய்யப்பட்டார். போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மேலதூதுக்குளி கிராமத்தைச் சேர்ந்த கொம்பையா மகன் முத்துராமலிங்கம் (26), சுப்பிரமணியன் மகன் சபரிசெல்வம் (19) ஆகியோர் திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர். மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் ராமதாஸ், இருவரையும் இம் மாதம் 27ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அதுவரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.